Monday 20th of May 2024 06:10:04 PM GMT

LANGUAGE - TAMIL
-
பளையில் மறைத்துவைத்திருந்த நிலையில் வாள்கள் மீட்பு!

பளையில் மறைத்துவைத்திருந்த நிலையில் வாள்கள் மீட்பு!


கிளிநொச்சி பளை முல்லையடி பகுதியில் மறைத்து வைக்க்பட்டிருந்த மூன்று வாள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பளை பொலிசாரால் மீட்க்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் இருந்து மேற்ப்படி வாள்கள் மீட்க்கப்படுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஏ9 வீதிக்கு அருகாமையில் மின்சார இணைப்புக்களுக்காக அங்கு அடுக்கபட்டிருந்த மின்கம்பங்களுக்கு இடையில் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் குறித்த வாள்கள் மீட்பட்டுள்ளன.

அவை எதற்காக அங்கு மறைத்து வைக்கப்பட்டது எனவும் யார் அதனை மறைத்து வைத்தார்கள் என்பது தொடர்பிலும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் அண்மையில் தான் குறித்த மின் கம்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஏதேனும் குற்ற செயலிற்கான திட்டமிடல்கள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE